பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


“ஒருவனுக்குத் தான் செய்த கொடுமை உடனே தனக்கு வராவிடினும், பின்பொருகால் உறுதியாக வந்து சேரும்” என்ற கருத்தையும், இக்குறளிலுள்ள “ஆம்” என்ற சொல் காட்டிக்கொண்டிருக்கிறது.

“துன்பமானது ஒருவனுக்கு வெளியிலிருந்து பிறர் செய்து வருவதுமட்டுமல்ல; ஒருவன், தானே தன் செயலாலேயே அதைத் தேடிக்கொள்ளவும் வரும்” என்பதை இக்குறள் கூறாமற் கூறுகிறது.

“வைகிறவன் வையப்படுவான்; அறைகிறவன் அறையப்படுவான்” என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை. வாழ்த்துகிறவன் வாழ்த்துப் பெறுவான், அன்பு செலுத்துகிறவன் அன்பைப் பெறுவான்“ என்பதும். இவ்வுண்மையை இக்குறளில் வள்ளுவர் ”நோயின்மை வேண்டுபவர் நோய் செய்யார்" என்ற சொற்றொடரால் விளக்குவது எண்ணி எண்ணி மகிழக்கூடியதாகும்.

அண்மையில் நான் சிறையில் இருந்தபொழுது தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற ஒரு கொலையாளியைச் சந்திக்க நேர்ந்தது. அவன் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பதைக் க ண் டு வியப்படைந்து காரணம் வினவினேன்.

"என் தந்தைக்குத் தானே தேடிய சொத்து சிறிது இருந்தது. அவர் அதை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் கொடுக்காமல் பிறருக்கு உயில் எழுதிவைக்க முயன்றார். நான் எவ்வளவோ கூறியும் கேளாததால் கொன்றுவிட்டேன். உயிலும் எழுதவில்லை. என் தந்தையும் இறந்துவிட்டார். நானும் இறக்கப்போகிறேன். சொத்து என் பிள்ளைகளைச் சேர்ந்துவிடும். என் எண்ணம் நிறைவேறி விட்டது. நான் எதற்காகக் கவலைப்பட