143
9. தெரிந்து செயல்வகை
4. 5. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடையார்
(இ-ஸ்) தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி, முன்புண்டான முதலும் இழக்கவரும் வினையைச் செய்யார் அறிவுடையார், (எ-று)
மேல் பிற்பயக்கவேண்டும் வினை செய்ய வேண்டும் என்றார்; இது பிற்பய வாதவினை செய்யலாகாதென்றது. 5
|து பற த தனறது
466. எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
(இ-கள்) முடியுமாயினும், பிறராலிகழப்படாதவற்றை எண் ணிைச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான், (எ-று).
இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டும் மென்றது. 6
467 நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவர வர்
பண்பறிந் தாற்றாக் கடை.
(இ-ள்) நன்மை செய்யுமிடத்தினும் குற்றம் வரும்;
அவ ரவர் குணமறிந்து செய்யாத விடத்து, (எ-று).
இதுவுமோரெண்ணம் கூறிற்று. 7
468. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
(இ-ள்) செய்யத்தகாதனவற்றைச் செய்ததனாலும் கெடும், செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும், (எ-று).
இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று. 8
469. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
(இ-ள்) மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் குற்றப்படும், (எ-று).
எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது 9