153
13. தெரிந்து தெளிதல்
502. அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
(இ-ள்) ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஒரி டத்துப் பற்றுடையரும் அல்லர்; பழிக்கும் நானுராதலான். (எ-று)
அரசனோடொத்த மறைந்த குற்றமுடையாரைத் தேறலாம், அவர் தம் குற்றம் மறைக்கு மாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் எ ன் ப து மகேச்சுரர் மதம். அது குற்றமென்று கூறப்
பட்டது, 2.
503 கா தன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.
(இ ஸ்) அன்புடைமையே பற்றாக, அறிவுடையாரல்ல தாரைத் தேறுதல், எல்லா அறியாமையும், தரும் (எ-று).
அரசர் அன்புடையாரைத் தேறலாமென்பது பராசரர்மதம். இஃது, இவ்வளவினால் தேறலாகாதென்றது.
5.04. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
(இ-ள்) பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந் , வனுக்கு அத்தெளிவு, தீர்தலில்லாத துன்பமுண்டாகும், (எ-று)
வழிமுறை என்றது தன்வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார் அமாத்தியராய்ப் போந்த முறைமை. தன் குலத்திலுள் ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத்தேறலா மென் பது வியாதன் மதம். அது குற்றமென்று இது கூறப்பட்டது. 4
305. தேரான் றெளிவுந் தெளிந்தான் கணையுறவுந்
தீரா விடும்பை தரும்.
(இ-ள்) (ஒருவனை) ஆராயாது தெளிதலும் தெளிந்தபின்பு ஐயுறுதலும் தீர்தலில்லாத துன்வத்தைத் தரும், (எ-று).