200
3. வினைத்துாய்மை
658. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு கற்பா லவை.
(இ=ள்) பிறர் (அழக்)கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்; அவ்வாறன்றி நற் பகுதியால் கொண்ட பொருளை இழந்தாராயினும், பின்பு பயன்படும், (எ-று).
இது, தேடின பொருள் கெடுமென்றது. 8
5ே9. சலத்தாற் பொருள் செய்தே மாத்தல் பகமட்
கலத்துணிர் பெய்திரீஇ யற்று.
(இ-ள்) வஞ்சத்தாலே பொருள் தேடி மகிழ்ந்திருத்தல், பசு மட் கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து, (எ-று).
இது, தானும் பொருளுங் கூடிக் கெடுமென்றது. 9
6 60. பழிமலைத் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிதல் குரவே தலை .
(இ~ள்) பழிப்பினாலே மிகுதியாக எய்து கிற ஆக்கத்தினும், சசன்றோர்க்குப் பெறுமிடியே தலை, (எ-று). 10
4 - வினைத்திட்பம்
வினைத்திட்பமாவது வினையின்கண் திண்ணியராதல். மேல் நல்வினை செய்யவேண்டுமென்றார்; அது செய்யுங்கால் திண்ணிய ராச் செயல் வேண்டுமாதலின், அதன் பின் கூறப்பட்டது.
6 61. எண்ணிய வெண்ணியாங் கெய்து ப வெண்ணியார்
திண் கைசிய ராகப் பெறின்.