2 | 6
8. குறிப்பறிதல்
708. ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
(இ-ள்) பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து
அறியவல்லாரைத் தேவாோடு ஒப்பக் கொள்க, (எ-று).
அவரும் பிறர் நினைவு அறிவர்; இவரும் அவ்வாறு அறி இவரை த் தேவராக மதிக்கப்படும் என்றது. இவை 8
தலான் பிரண்டும் குறிப்பறிந்தார்க்கு உளதாகும் நன்மை கூறின.
7.09. முகநோக்கி நிற்க வமைய மகநோக்கி
மற்ற துணர்வார்ப் பெறின்.
(இ-ள்) முகத்தை நோக்கி நிற்க, அமையும்; தன் மனத்தை நோக்கி அறிலுற்றதனை அறியவல்லாரைப் பேறின், (எ-று)
எனலே, அமாத்தியர் குறிப்பை அரசரும் அறியவேண்டு மென்றவாறாயிற்று; நிற்கின்ற தொழில் அமாத்தியன் கண்ண
தாகலான். 9
710. குறிப்பிற் குறிப்புணர் வா ரை யமுறுப்பினுள்
யாதுங் கொடுத்துக் கொளல். (இ-ள்) முகக் குறிப்பினாலே உள்ளக்கருத்தை அறியுமவர் களைத் தன் உறுப்பினுள் வேண்டுவது யாதொன்றாயினும் கொடுத்துத துணையாகக் கூட்டிக் கொள்க, (எ-று).
உறுப்பினுள் என்பதனைத் தனக்கு அங்கமாயினவற்றுள் எனினும் அமையும். குறிப்பறிவாரை அறிதல் குறிப்பறிதலாயிற்று. குறிப்பறிவாரை அரசன் கடியப்படுமோ கூட்டப்படுமோ என்று ஐயமுற்றார்க்குக் கூறப்பட்டது. இவையிாண்டும் அரசன் மேலன 10