245
2. நட்பாராய்தல்
800. ஆய்ந்தாய்ந்து கொள்ளாத சன் கேண்மை கடைமுறை
தான் சாத் துயரந் தரும்.
(இ-ள்) குற்றம் (ஆய்ந்து குண மும் ஆய்ந்து) கொள்ளா கான் கொண்ட நட்புப் பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும், (எ-று) . 10
இஃது ஆராய சமையால் வருங்குற்றங் கூறிற்று.
3. பழைமை
பழைமையாவது நட்டோரது உரிமை கூறுதல். இஃது அவருரி மையால் செய்வனவற்றிற்குப் பொறுக்கவேண்டுமென்று அதன்பின் கூறப்பட்டது.
8.01. பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
(இ-ள்) பழைமையென்று சொல்லப்படுகின்றது யாதெனின், யாதொன்றினையும் உரிமை அறுத்தலில்லாத நட்பு, (எ-று)
இது பழைமையாவது இது என்று கூறிற்று. 1
802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.
(இ-ள்) நட்பிற்கு அங்கமாவது உரிமை; அவ்வுரிமையால் செய்யுமதற்கு உடம்படுதல் சான்றோர்க்கு இயல்பு, (எ-று)