289
12. மருந்து
(இ-ள்) உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன்னுடம் பின் அளவிற்கு மிகினும் குறையினும், நூலோரான் எண்ணப்பட்ட வாதமும் பித்தமும் சிலேஷ்மமுமாகிய மூன்றும் நோயைச்செய்யும்
-று) .
மேல் உணவு மிகின் நோய் செய்யும் என்றார்; அதுவே அன்றி மற்றுள்ளவை மிகினும் இவை மூன்றும் குறையினும் நோயாகும் என்றது. 6
947. நோய் நாடி நோய் முத னாடி யது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்.
(இ-ள்) நோயினையும் ஆராய்ந்து, நோய் வருவதற்குக் காரண மும் ஆராய்ந்து, உளம் நோய்தீர்க்கும் நெறியும் ஆராய்ந்து, தப்பா மற் செய்க. (எ-று).
இது, நோய் தீர்க்குமாறு கூறிற்று.
948. உற்றா னளவும் பிணியனவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்,
(இ-ள்) நோயுற்றவன் அளவும், நோயின் அளவும், அது பற்றிய காலமும் அறிந்து, அதற்குத் தக்கவாறு மருந்து செய்க; ஆயுளு வேதம் வல்லார், (எ-று).
மேல் வாய்ப்பைச்செய் என்றார்; இது வாய்ப்பர் செய்யுமாறு
கூறிற்று. 8
949. உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல் வானென்
றப்பானாற் கூற்றே மருத்து.
( இ-ன்) நோய்யுற்றவனும் நோய்தீர்க்கு மவனும், அதற்குத் தக்க மருந்தும், அதனைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றின் வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து, (ா-று).
எனவே இந்நான்கினும் ஒன்று தப்புமாயின் நோய் தீராது என்றவாறாயிற்று. இது மருந்தின் பகுதி கூறிற்று. !)