3.25
12. இரவச்சம்
10.67. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பார்க்குச்
சொல்லாடப் போஒ முயிர்.
(இ-ள்) எமக்கு யாதும் இல்லை; சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்கு அக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அள விலே உயிர் போய்ப் பிணம்போல நிற்பர்கள்; (பொருள்) உடையராய் வைத்து அவா சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்வி
ஈயாதார்க்கு உயிர்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ, ( , ))
இது, பிணத்தை யொப்பரென்றது.
1068. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக விலகியற்றி யான்.
(இ-ள்) துப்புரவு இல்லாக்கால் இறந்து படாதே பிறர் மாட்டு இாந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாற்றால் கற்பித்த முதல்வன் மிகக்கெடுவானாக வேண்டும். (எ- று) .
இஃது. இரக்கு மதனின், இறக்க அமையுமென்றது. இவை
முன்றினானும் இரவினால் வரும் குற்றம் கூறப்பட்டது, 8
1069 தெண்ணி ரடுபுற்கை யாயினுந் தாடந்த
துண்ணலி னுரங்கினிய தில்.
(இ-ள்) மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரி னாலே அடப்பட்ட புற்கையாயினும், தனது தாளாண்மையால் வந்த தனை உண்டலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை, (எ-று).
இரந்து கொண்டக்காரம் பாலோ டயிறலின் புற்கை அயிறல் இனிது என்றது. 9
1070. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடனில்லாக்
காலு மிரவொல்லாச் சால்பு.