37.8
7. கனவுநிலை யுரைத்தல்
விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை. M.I.
1217. நனவினா னல் காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.
(இ-ள்) நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவா நிற்பர், அவரைக் கனவின் கண் காணாதவர்; காண்பாராயின், நேச வார்,
(எ-று).
இது, தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்
பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
1218. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ர வர்.
( இ-ள்) இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கி யகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறா நிற்பர்; அவரைக் கனவின்கண் காண ர்களோ ! (எ-று).
“இவ்வேறுபாடு அலராயிற்று’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 8
1219. நனவென வொன்றில் லை யாயிற் கனவினாற்
காதலர் நீங்கலர் மன். (இ-ள்) நனவு என்று ஒன்று இல்லையாயின், கனவின்கண் வந்த காதலர் பிரிதல் இல்லை, (எ-று).
“யாங்கள் எல்லாம் காணாது ஒழியவும் நீ கண்டாய் ஆயின் அவரைப் பிரியவிட்டது என்னை’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9
1220. காதலர் துரதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருத்து.
(இ-ள்) நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது செய்வேம் விருந்து, (எ-று).