46
10. ஒழுக்கமுடைமை
(இ-ள்) ஒழுக்கத்திேைன தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையானே தமக்கு அடாத பழியை எய்துவர், (எ-று).
இஃது அடாப் பழியுண்டா மென்றது. 7
138. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.
(இ-ள்) முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்; தீய வொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தரும். (எ-று),
என்றதனனே இருமையின் கண்ணுமென்று கொள்ளப் படும். இது துன்பம் தரும் என்றது. S
139. ஒழுக்கமுடையவர்க் கொல்லாதே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
(இள்) தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்க முடையார்க்கு இயலாவாம். (எ-று).
மேலையதிகாரத்து அரிதாக அடக்க வேண்டும் என்ற நாவடக்கமும் இதேைனயுண்டா மென்றது. 9
140. ஒழுக்கம் விழுப்பந் தர லா ளுெழுக்க
முயிரினு மோம்பப் படும்.
(இ-ள்) ஒழுக்கம் சீர்மையைத் தருதலானே, அதனைத் தன் உயிரைக்காப்பதினும் மிகக் காக்க, (எ-று).
மேற்கூறிய நன்மையெல்லாந் தருதலான், இதனைத் தப்பா மற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று. 10