60
15. புறங் கூறாமை
187. துன்னியார் குற்றமுந் தாற்று மரபினு
ரென்னேகொ லே திலார் மாட்டு.
(இ-ள்) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்றவர், செறிவில்லார் மாட்டு யாங்ஙனஞ் செய்கின்றாரோ? ( 61 - pi).
இது, யாவரோடும் பற்றிலரென்றது. 7.
188. அறனுேக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.
(இ-ள்) பிறரில்லாதவிடம் பார்த்துப் புன்சொற் கூறுவானை நிலம் பொறுத்தது. பாறை தனக்குத் தானே தருமமாதலானே பொறுத்ததாம் இத்தனையல்லது போம், (எ-று).
இது, இவற்குத் துணையாவாரில்லை யென்றது. 8.
189 பிறன் பழி கூறுவா றன் பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப்படும்.
(இ-ள்) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்
டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத்தெரிந்து பிறராற் சொல்லப் படுவன், (எ-று) .
இது பிறரால் புறம் சொல்லப்படுவனென்றது. 9
190. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்
lதுண்டோ மன்னு முயிர்க்கு,
(இ-ள்) அயலார் குற்றம்போலத் தமது குற்றத்தையுங்
கான வல்லாராயின், நிலைபெற்ற வுயிர்க்கு வருந்தீமையுண்டோ? (எ- று).
காண்பாராயின், சொல்லாரென்றது; இது புறஞ் சொல்லா மைக்குக் காரணங்கூறிற்று. 10