79
2. புலான் மறுத்தல் புலான் மறுத்தலாவது புலால் உண்டலைத் தவிர்த்தல். இஃதுண்பார்க்கு அருளின்றா மென்பதனால் அதன்பிற்
- t-L–.9bl (,
251. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.
(இ-ள்) புலாலை யுண்ணாமை வேண்டும்; அது பிறி
தொன் றன் புண்ணாம் லான்: னை அவ்வாறு காண்பாருண்
f F H ஆதி ; அதி 9| இறு (L)
யின், (எறு).
காணாதார்க்கு அமிழ்தாயே தோற்றும். இது, புலான் மறுத்தல் வேண்டும்மென்பது உம், அது தூயதாமென்பதுாஉங் கூறிற்று. 1
252. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.
(இ-ள்) பொருளினை யாளுதல் அதனை நோக்கமாட்டா தார்க்கு இல்லை; அதுபோல, அருளினை யாளுதல் ஊன் தின்ப வர்க்கு இல்லை, (எ-று).
மேல் புலாலுண்டல் தூய்தன்றென்றார்; அதனாற்குற்ற மென்னை தின்றார் உடம்புதானும் துாய் தன்றே என்றார்க்கு, அவ் வாறேயல்ல அருட்கேடும் வருமென்று கூறப்பட்டது.
253. தன்னுரன் பெருக்கற்குத் தான்பிறி தானுண்பா
னெங்ஙன மாளு மருள்.
(இ-ள்) தன்னுடம்பை வளர்த்தற்குத் தான் பிறிதொன்றன் உடம்பை உண்ணுமவன், அருளுடையவனாவது மற்றியாதனான் (எ-று).
இஃது, ஊனுண்ண அருட்கேடுவருமோ என்றார்க்குக் கூறப் பட்டது.
254. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றாக்கா தொன்றி
னுடல்சுவை யுண்டார் மனம்.
என்பது மணக். பாடம்.
F F
1. புலாலைப்