பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௧௨

முன்னுரை 


யானது பெயர்த்தனென் ஆகத் தானது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கி யோனே'

(சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனர்)
- புறம் 394: 3 - 15.

இனி, சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரைநக்கீரர் பாடியது:

'தன்கடைத் தோன்றி என்னுற இசைத்தலின்
தீங்குரல் . . . . . . கினரிக்குரல் தடாரியோடு
ஆங்குநின்ற எற்கண்டு
சிறிதுநில்லான் பெரிதும் கூறான்
அருங்கலம் வரவே அருளினன்'

- புறம் 395: 24 - 28.

இனி, ஆயைத் துறையூர் ஓடை கிழார் பாடியது:

'தண்புனல் வாயிற்றுறையூர் முன்றுறை
நுண்பல் மணலினும் ஏத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே'

- புறம்: 136; 25 - 27.

இனி, நாஞ்சில் வள்ளுவனை மருதனிள நாகனார் பாடியது:

'ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலைபின் னொழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண'

- புறம் 138: 1 - 5.

இனி, கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது:

'கொண்பெருங் கானம்
நச்சிச் சென்ற இரவலர்'

- புறம்: 136; 2 - 3.

இனி, பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது: