பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௩௬

முன்னுரை 


பிறப்பியல் கோட்பாட்டையும் திருவள்ளுவர் அடியோடு பின் வருமாறு மறுத்துரைப்பார்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு:
— 1.

'விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது
- 16.
'நீரின்று அமையாது உலகு
– 20.

- முதலிய கருத்துகளால் அவர்தம் படைப்புக் கொள்கையையும்,

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்
– 972.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்
— 973.

ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்
– 133.

மறப்பினும் ஒத்துக் கொளலாகும்; பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
– 134.

'அந்தணர் என்போர் அறவோர்,மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்
- 30.

'செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலா தார்’ –
26.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்'
- 505,

'இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோடு ஒழுகப் படும்'
– 698.

'மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு'
- 409.

-என்னும் இவை போன்ற நூற்றுக் கணக்கான கூற்றுகளால் ஆரியவியலின் பிறப்பியல் கோட்பாட்டையும் வருணாச்ரமக் கொள்கையையும் அழுத்தம் திருத்தமாக அடியோடு தகர்த்து எறிகிறார், என்க. எசுர் வேதத்தில் மக்களுக்குள் நூற்றுத் தொண்ணுற்றாறு பிரிவுகள் உள்ளன என்று கூறப்பெற்றுள்ளது. இனி, வர்ணாச்ரமக் கோட்பாட்டின்படி ஆரியவியலில்