௨௩௬
முன்னுரை
5. மக்களியல்:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர்
-997
6. உலகியல்:
உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
-140
7. பொதுமையியல் :
ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
214
8. பொதுவுடைமையியல்:
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
-322
9. மனவியல் :
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
-190
10. மக்கள் மனவியல்:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து
-250
11. உடலியல்:
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு
-945
12. மருத்துவ இயல்:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
-948
13. தொழிலியல் :
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
-463
14.தொழில் நுட்பவியல்:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
-1038
15. குடும்பவியல் :
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-45
16. ஒழுக்கவியல் :