18
அ- அறிவியல்-முன்னுரை
18 - அ. அறவியல்-முன்னுரை
நூற்கு இனியமையாத அணியாய் முன் உரைக்கப் படுவதை
- உரை என்றும் கூறுவன, பாயிரத்தின் இன்றியமையாமையை மேலும் வலியுறுத் தும்.
இனி, திருக்குறளுக்கு வாழ்த்துரைகளாக வழங்கும் திருவள் ளுவமாலைச் செய்யுள்கள் சிலவற்றாலும், இப்பாயிரவியல் பற்றிப் பலவாறான குழப்பங்களும் குளறுபடிகளும் நேர்ந்துள்ளன.
முதற்கண்,
திருவள்ளுவ மாலையில் உள்ள நத்தத்தனாரின் 16ஆவது பாடலின் முதலிரண்டு அடிகள்
ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - என்று வருகின்றன. -
இதில், பாயிரம் என்பது, இப்பொழுதுள்ள 1330 குறட்பாக்களுக்கும் அப்பாற்பட்ட மிகைப்பகுதியாகக் குறிக்கப் பெற்றுள்ளது.
இப்பொழுதுள்ள பாயிரப் பாடல்கள் பாயிரமே ஆகாத நிலையில், வேறு பாயிரப் பகுதி அல்லது இயல் ஒன்று இருந்திருந்து அழிந்தோ அல்லது மறைக்கப்பட்டோ போயிருக்குமோ என்பது ஐயமாகிறது.
ஆனால், இதற்கு இன்று வரை விடையில்லை.
இனி, இரண்டாவதாக, சிறுமேதாவியாரின் 20-ஆம் பாடலாகிய,
வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம் நாடிய முப்பத்து மூன்று ஒன்று ஊழ்-கூடுபொருள் எள்ளில் எழுபது இருபதிற் றைந்துஇன்பம் வள்ளுவர் சொன்ன வகை என்னும் பாடலில், இக்கால் உள்ள நூல் அதிகாரங்கள் 133-க்கு மேல் வீடு என்று ஒர் அதிகாரமும் உள்ளதாகக் குறிப்பு இருப்பதை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். அது கொண்டு, சிலர் திருக்கு றளின் மொத்த அதிகாரங்கள் 134 என்றும், மொத்த குறட்பாக்கள் 1340 என்றும் கூறுவர். ஆனால் இது தவறாகவும் இருக்கலாம். எவ்வாறெனில், விடொன்று என்பதை வீடு ஒன்று என்று எண்ணுப் பொருள் கூறாமல், வீடொன்று என்பது வீடு பொருந்திய பாயிரம் என்று விளக்கப் பொருளாகவும் கொள்ளலாம். அவ்வாறு கொள்ளவே இக்கருத்துக் குழப்பம் நீக்கம் பெற்று விடுகிறது.