254 அ-2-13 அழுக்காறாமை 17
பொழிப்புரை பிறர்மேல் பொறாமை கொள்ளும் தவறான உணர்வினால், தமக்குக் கேடு உண்டாவதை அறிந்து கொள்ளும் அறிஞர்கள், அத்தீய உணர்வினால் அறத்திற்கு மாறான செயல்களைச் செய்ய மாட்டார்.
சில விளக்கக் குறிப்புகள் :
1. இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து பிறர்மேல் பொறாமை கொள்ளும் தவறான உணர்வினால், தமக்குக் கேடு உண்டாவதை அறிந்து கொள்ளும் அறிஞர்கள்.
இழுக்காறு அதிகார முறையினால் இழுக்காறு என்பது, அழுக்காறு .
பொறாமை கொள்ளுதலைக் குறித்தது.
ஏதம் - கேடு, துன்பம், குற்றம் (136), (275), (83).
- பொறாமையினால் வரும் கேடு முன்னுரையில் உணர்த்தப் பெற்றது.
அறிந்து முன்கூட்டியே அறிந்து.
‘அறிந்து எனலால் அறியப்பெற்ற அறிஞர்கள் வருவிக்கப் பெற்றது.
என்னை?
அறிவுடையார் ஆவது அறிவார்’ - 427
‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ . – 429
என்றார் ஆகலின். -
2. அழுக்காற்றின் அல்லவை செய்யார் பிறர்மேல் பொறாமை கொள்ளும் தீய உணர்வினால் அறத்திற்கு மாறான செயல்களைச் செய்யமாட்டார்.
இங்கும் அறிந்து எனும் சொல்லிற்குப் பரிமேலழகரும், அவர் வழிச் செல்லும் பாவாணரும், ‘இருமையிலும் துன்பம் - கேடு - வருதலையறிந்து என்று தம் இயல்புப்படி, இம்மை, மறுமைக் கொள்கைக்கு அரண் சேர்ப்பர். அது மாந்தவியலுக்கு மதவழிச் செய்யும் அச்சுறுத்தம் என்று தவிர்க்க -
3. இஃது, பொறாமையினால் வரும் கேட்டை அறிஞர்கள் முன்னறிவார்களாகையினால், அவர்கள் அவ்வுணர்வினைக் கடைப்பிடியாமை குறிக்கப் பெற்றதால், பிறனாக்கம் பேணாது அழுக்கறுத்தலின் பின்னர் வைக்கப் பெற்றது.