திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
261
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 261
பொழிப்புரை பொறாமை எனும் ஒப்பிலாத ஒரு கெடும்பன், அஃது உடையவனை, அவன் செல்வத்தை அழித்துத் தீய வழிகளில் கொண்டு சேர்த்து விடும்.
சில விளக்கக் குறிப்புகள் :
1. அழுக்காறு என ஒரு பாவி - பொறாமை எனும் ஒப்பில்லாத ஒரு
கெடும்பன்.
ஒரு பாவி - என்றதால், ஒப்பிலாமை கூறப்பெற்றது. - பாவி - பாவம் செய்வதற்கு உரியவன். - பாவம் தீவினை (146)
வடசொல்.
(விளக்கம் 146ஆம் குறள் விளக்கத்தில் கூறப்பெற்றது. ஆண்டுக் காண்க) 2 திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் திருவினைச் செற்று செல்வத்தை
அழித்துத் தீய வழிகளில் கொண்டு சேர்த்துவிடும். திரு செல்வம். - - அழகு, சிறப்பு, மேன்மை, பொலிவு, பேறு, தெய்வத் தன்மை, கவர்ச்சி,
துய்ப்பு, பெருமை முதலிய உயர்நிலைப் பொருள்கள் தரும் சொல். அவற்றைத் தருகின்றதால் செல்வத்திற்கும் பொருளானது.
செறுதல் - அழித்தல், கெடுத்தல்.
செற்று அழித்து, கெடுத்து.
- தீயுழி - தீயவழி. - உழி இடம், பக்கம் என்று பொருள்படும் சொல். எனவே தீய இடம்,
தீய பக்கம், தீய வழி எனும் * பொருள் கொண்டது.
. ‘தீயுழி உய்த்துவிடும் என்பதற்கு மணக்குடவர் ‘தீய கதி என்று கூறி, நரகம் என்று விளக்கியும் பரிமேலழகரும் பரிதியும், பாவாணரும் மறுமைக் கண் நரகத்திற் புகுத்தி விடும் என்றும் வேண்டாது பொருள் கூறுவர். - -
- பாவாணர் ஒருபடி மேற்சென்று தியுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர் என்று வேண்டாது விளக்கமும் கூறுவார்; அவர் கிறித்துவம் சார்ந்தவர் ஆகலின். -
கிறித்துவமும் வேத மதமாகிய ஆரியமும் இற்றை இந்து மதமும்,