திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
329
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 329
- என்பார் ஆகலின்.
4. வேண்டற்க ஆகலின் அதை விரும்பாது விடுக.
- பிறனிடமிருந்து கவர்ந்து கொள்ளப்பெற்ற செல்வம், தன் முயற்சியால் வந்ததன்று; பெருமை இல்லாமல் வந்தது; செப்பமில்லாதவர்கண் வந்தது; பண்பிலானிடம் வந்தது; ஆகலின் அதைப் பிறர்க்குப் பெருமையுடன் ஈதலும் இயலாது தாமே துய்த்தலும் இயலாது. எனவே அதனை விரும்ப வேண்டா என்றார், என்க. - -
5. முன்கூறிய ஆறு குறட்கருத்துகளுக்கும் இயைபாக, அவ்வாறு பிறனிடமிருந்து கவரப்பெற்ற செல்வம், என்ன நோக்கத்திற்காகக் கவரப் பெற்றதோ, அந்நோக்கத்திற்கும் உதவாது ஆகையால், அதனை விரும்பற்க என்று முடிவு கூறினார்; எனவே அவற்றின் பின் இதை வைத்தார்.
கனஅ. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். - 178
பொருள்கோள் முறை :
செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும்.
பொழிப்புரை ஏற்கனவே தான்கொண்ட செல்வம் குறையாமல் இருக்க வழி யாதெனின், பிறனுக்கு உரிய உடைமைப் பொருளைத் தான் கவராமல் இருப்பதே ஆகும்.
சில விளக்கக் குறிப்புகள் : . - 1. இதில் உள்ள வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள் என்பதனை, முன்னை உரையாசிரியர் பலரும், பிறன்வேண்டும் கைப்பொருள் வெஃகாமை என்று கொண்டு கூட்டுவர். இதில் அவ்வாறல்லாது பிறன்கைப்பொருள் வெஃகாமை வேண்டும் என்று கூட்டிப் பொழிப்பு உரைக்கப்பெற்றது என்க. அதன் உண்மை விளக்கத்தாற் புலப்படும். - 2. செல்வத்திற்கு அஃகாமையாதெனில் ஏற்கனவே தான்கொண்ட செல்வம்
குறையாமல் இருக்க வழி யாதெனின், செல்வத்திற்கு - ஏற்கனவே தான் கொண்டிருக்கும் செல்வத்திற்கு, அஃகாமை யாதெனில் குறையாமை யாதெனில்,