திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
77
திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 77
- துலாக்கோலின் இயல்பாம் தன்மைக்கு,
“துலாக்கோல் இயல்பே தூக்குங் காலை மிகினும் குறையினும் நில்லா தாகலும் ஐயந் தீர்த்தலும் நடுவு நிலைமையோடு எய்தக் கூறுய இயல்புணர்ந் தோரே’ ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும் மெய்ந்நடு நிலையும் மிகுநிறை கோற்கே’ - என்னும் நூற்பாக்களை எடுத்துக் காட்டுவர், கோ. வடிவேலனாா
@Tori HTIT.
- ஏர் உழவர்க்காம் கருவிபோல், துலாக்கோல் வணிகர்க்கு ஆகும் - புழங்கும் கருவி என்க. 4. ஒருபால் கோடாமை - ஒரு புறத்தே சாய்ந்து நிற்கும் தன்மை இல்லாமை,
‘கொடு என்னும் வளைவுக் கருத்தினின்று - கோடு - கோடுதல் தோன்றியது. கோடுதல் - வளைதல்; கோடாமை - வளையாமை, சாயாமை.
- பால் இடப் பொருள் தரும் சொல்.
- பக்கத்தையும் குறிக்கும்.
- ஒருபக்கமாக ஓரிடமாகச் Posit Isroots).
5. இது, சமநிலை - நடுவுநிலைக்கு உவமை கூறிக் காட்சியளவையான் உணர்த்தியதாகலின் அவற்றின் பின்னர் வைக்கப் பெற்றது என்க.
ககசு சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா -
உட்கோட்டம் இன்மை பெறின் . . . - #19
பொருள்கோள் முறை: -
- உள்கோட்டம் ஒருதலையா இன்மை பெறின்,
செப்பம் சொல்கோட்டம் இல்லது.
பொழிப்புரை உள்ளத்தில் கோணல் உறுதியாக இல்லாமல் இருந்தால், நடுவு
நிலையுணர்வு சொல்லிலும் கோணல் இல்லாமல் செய்யும்.
சில விளக்கக் குறிப்புகள்:
உள்ளத்துணர்வு அறிவுத் துணையுடன்) சொல்லைத் தோற்றுவிக்கும் உள்ளம் துவல் என்றால் அறிவு மை. இரண்டும் சேர்தலால் சொல்