158
அ-2-19 ஈகை 23
சேண்படு நிரப்பின் எய்தினோர், புரப்போர்த்
தீர்ந்தவர், தந்தையாய், குரவர்,
காண்தகும் உதவி புரிந்துளோர் - இனையோர்
ஒன்பதின் மரும் உளங் களிப்ப
வேண்டுறு நிதியம் அளிப்பின், மற்று,ஒன்றே
கோடியாம் எனமறை விளம்பும்!
- காசிகாண்டம்.
‘காயா மரமும் வறளாம்
குளமும் கல்லாவும் என்ன
ஈயா மனிதரை ஏன்படைத்
தாய், கச்சி ஏகம்பனே!'
- பட்டினத்தார்
'நீரினும் சாயல் உடையவன்
நயந்தோர்க்குத் தேரியும் வண்கை யவன்’
- கலி:42:20-21
‘இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்'
- கலி:47:5-6
'நிலந்தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்
இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய
......................................................ஈகை நல்கி’
- மலைபடு:575-580
'மண்ணுடை ஞாலத்து மன்னுயிர்க்கு எஞ்சாது
ஈத்து'
- பதிற்:15:36
‘கண்ணகன் வைப்பின் மண்வகுத்து ஈத்து'
- பதிற்.பதிகம்:3-5
'துப்புத் துவர்போக பெருங்கிளை உவப்ப
ஈத்தான்று ஆனா இடனுடை வளன்'
- பதிற்:32:5-6
'மழைசுரந் தன்ன ஈகை’
- அகம்:238:13
'இரவன் மாக்கள் ஈகை துவல’
- புறம்:24:30
'செந்நீர்ப் பசும்பொன் வயிரியற்கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்’
- புறம்9:9-10
'அமிழ்து அட்டாணாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை’
- புறம்:10:7-8
‘வல்லா ராயினும் வல்லுநர் ஆயினும்