பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

211


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 211

குடும்பமும் என்றும் கூறலாகும். . பிறர்கின்றித் தாமே தமித்து. உணல்: உண்டது.

உண்பது என்று மட்டும் கூறியிருந்தாலும் நுகர்ச்சி அனைத்தையும்

சுட்டுவதாகும்.

. நிரப்பிய என்பதற்குத் தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்ப

வேண்டி என்றும் பொருளுரைப்பார்.

இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்றெண்ணிக் கரப்பவர் கண்டறியார் கொல்லோ - பரப்பில் துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப இறைத்தோறும் ஊறும் கிணறு’ - பழமொழி:344 . ஆனால், இதனைப் பெயரெச்சமாகக் கொண்டு, நிரப்பிய பொருள்

என்று கொள்வதே பொருத்த முடைத்தென்க. - உலகின் எந்த நுகர்ச்சியையும் தமியராக நுகர்வதில் நிறைவும் இல்லை;

இன்பமும் இல்லை என்க. உணவு நிலையும் அத்தகையதே. - இது அனைத்துப் பொருட்பயனையும் சுட்டதால், தமித்து உண்ணுதல்

கொடியது என்றார், என்னை?

‘உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை’ - 89 ‘ஏமுற் றவரின் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் யவன்’ – 873 அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று’ - 1007 - என்றார், என்க. - ‘தமியர் ஆக இனியர் கொல்லோ” - குறுந்:1172:4 ‘அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார் நெஞ்சு உண மொழிய மன்னே - அகம்:157:9-10 ‘இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்’ - பதிற்று:38:15 ‘. . . . . . . .சில்பதம் கொழித்துத் w தாம் அட்டு உண்டு தமியர் ஆகி’ - அகம்:216:14

‘அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்