214
அ-2-19 ஈகை 23
214 அ-2-19 ஈகை 23
பொழிப்புரை சாவதைவிடத் துன்பமானது உலகில் வேறு இல்லை. அந்தச் சாவும்கூட, ஈகை மனம் கொண்டவனுக்கு, வறியவர்க்கு ஒன்று ஈயமுடியாத பொழுது இனியது.
சில விளக்கக் குறிப்புகள்:
சாதலின் இன்னாதது இல்லை: சாவதைவிடத் துன்பமானது உலகில் வேறு இல்லை. சாதல் உயிர் உடலை விட்டுப் பிரிதல்.
இன்னாதது. துன்பமானது கொடியது.
சாதலைவிடக் கொடியது உலகில் இல்லை என்பது வழக்குரை. - ஆனால், சிலர் சாதல் துன்பமிலை என்பர்.
- அஃதாவது நோய் நொடியால் சாவதே துன்பமானது. அவையின்றித்
திடுமென - சாவது துன்பமில்லை என்பர்.
ஆசிரியரும் அதை ஒப்புவர். என்னை?
‘குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு) உயிரிடை நட்பு’ - 338 ‘உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ - 339
- மேலும் ஒருவர் ஒரு கொள்கையின் பொருட்டோ, அல்லது போரிலோ இறப்பதை வீரச்சாவு என்று புகழ்வர். அத்தகைய சாவு விரும்பி வரவேற்கத் தக்கது என்பார் ஆசிரியர்.
“சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து - 777 ‘உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்’ ... 778 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்’ . - 79
- இவை ஆசிரியர் படைத்த சாதலுக்கு அஞ்சா வீர மறவர்தம் கூற்று.
- இவர் போல் வேறு மறவர் சிலரும் சான்றோர் பிறரால் காட்டப்
பெறுவர்.
போரெனில் புகலும் புனைகழல் மறவர்’ - புறம்:31:9