220
அ-2-20 புகழ் -24
220 அ-2-20 புகழ் 24
எடுத்துக்காட்டுகள்: -
வேள்வியின் அழகியல் விளம்புவோர்’ - பரி:19:43 ‘விளம்புவர்’ - u:30:243
‘வியம்பினன்’ - சிலப் 11:193
‘இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்’ - 853
(விளக்கம் புகழ்) 2) பெயர்: வழக்கு: பெயர் பெறுதல், பெயரெடுத்தல், பெயர் விளங்குதல். விளக்கம் இது, பெயரை மட்டும் மக்கள் அறிந்திருத்தல். ஏதோ ஒரு செயலையோ, கருத்தையோ, பெருமையையோ அடிப்படையாகக்
கொண்டு, அத்தகையவர்கள் தம் பெயரை மட்டுமோ அல்லது ஊரையுமோ அறியச் செய்தல்
(எ-டு) மாமல்லபுரம், ஊசி தொட்ட ஏரி, வினைதீர்த்தான் மடம்,
படியளந்தான் வாய்க்கால் முதலியன.
கழகக் காலத்தில் பெயர்பெற்ற நகர்கள், ஊர்கள், மலைகள், குடிகள்,
கொடையாளிகள், அரசர் இருந்தனர்.
போரில் வீரச்சாவு எய்தியவர்தம் பெயரும் சிறப்பும் எழுதிய நடுகற்கள்
வைக்கும் பழக்கமும் இருந்தது.
- திருக்குறளில் பெயர்ப் பெருமைக்கு எடுத்துக்காட்டுகள் இல்லை. கழக
நூல்களுள் உண்டு. அவற்றுள் சில:
அடுபோர்ச் செழியன் பெரும் பெயர்க் கூடல்’ - நற்:39:10 ‘பெரும்பெயர்த் தந்தை நீடுபுகழ் நெடுநகர்’ - நற்:162:7 ‘பொலிக நின் பெயரே’ - நற்:198:12 நின்பெயர் வாழியரோ - பதிற்:18:12 தம் பெயர் போகிய ஒன்னார் தேயம்’ - பதிற்:88:4 ‘பெற்ற பெரும்பெயர் பலர்கை இரீஇய . கொற்றத் திருவின் உரவோர் உம்பல்’ - பதிற்:90:23 பெயர்பெற்ற மால்வரை உடைத்து - Lifl:5:9 ‘பெரும்பெயர் முருக! - usi:5:50 இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே - Lift:15:35
‘பெரும் பெயர் மீளி’ - கலி:17:21