பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

239


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 239

அருகா தீயும் வண்மை

உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே’ - புறம்:320:16-18 ‘இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை வில்லேர் உழவரின் நல்லிசை உள்ளி’ - புறம்:371:12-13

என்றார் பிறரும். 2 இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் : இல்லாதவர்க்கு இருந்தவர்கள் கொடுத்துதவிய புகழ்ச்சி நிலையே ஆகும். இரப்பார்க்கு இல்லை என்று தன்னிடம் வந்து இரந்தவர்க்கு அஃதாவது

இல்லாதவர்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் ஒன்று கொடுத்தவர்கள் பாங்கில் இருக்கும்

புகழ்ச்சி நிலையே ஆகும். ஒன்று ஈவார். அவர்கள் புகழ் பெறுமாறு தக்க ஒர் உதவிசெய்தவர். மேல் நிற்கும் புகழ்: அவர் பாங்கில் உள்ள புகழ்ச்சி நிலையே ஆகும். - முன்னைய குறளில் ஈதல் இசைபட வாழ்தல் என்றாராகலின்,

இரப்பார்க்கு ஒன்று ஈந்ததன் மேல் நிற்கும் புகழ்’ என்றார். அஃதாவது, உலகில் பலவகையாகப் பேசும் பெறும் புகழ்நிலைகள் எல்லாம், இரப்பார்க்கு - இல்லாதவர்க்கு இருந்தவர்கள் கொடுத்துதவிய புகழ்ச்சி நிலையே ஆம் என்றார், என்க.

3) முன்னைய குறளில் வாழ்வின் பயன் ஈதலும் அதனால் புகழ் பெறுதலும் என்றவர், இதில், அக்கருத்தை இன்னும் சற்று ஆழமாக, அக்கருத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், இவ்வுலகத்துப் பாராட்டப் பெறும் புகழ் எல்லாம், இரந்தார்க்கு ஒன்று ஈந்ததால் வந்த பெருமையே ஆகும் என்று கூறலால், அதனையடுத்து இதனை வைத்தார், என்க.

உங்க. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் -

பொன்றாது நிற்பதுஒன்று) இல். - 233

பொருள்கோள் முறை:

ஒன்றா உலகத்துப் பொன்றாது நிற்பது, உயர்ந்த புகழ் அல்லால், ஒன்று இல்,