திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
33
சில விளக்கக் குறிப்புகள் :
1. துன்னியார் குற்றமும் - தம்மொடு பொருந்திய நண்பர்தம் குற்றத்தையும்.
துன்னுதல் - பொருந்துதல்.
- துன்னியார் - பொருந்தியவர் நண்பர்.
- பொருந்திய நண்பர்.
குற்றமும் - குற்றத்தையும்,
- 'உம்'மை, சிறப்பும்மை,
துன்னியார்க்கு வந்தது.
2. தூற்றும் மரபினார் - வெளியில் போய்ப் பழிதூற்றுகின்ற வழக்கம் உடையவர்.
தூற்றுதல் - பழிதூற்றுதல்
தூற்றல் - ஓரிடத்து விழுமாறின்றிப் பரவலாகப் பலவிடத்தும் படுமாறு செய்தல்.
- மழைத்துாறல் போல் பலரிடத்தும் சிதறச் செய்தல்,
- 'களத்தில் பொலிதுற்றுவது போலப் பலரறியப் பரப்புதல்' என்பார் பாவாணர்.
மரபினார் - வழக்கம் உடையவர்.
மரபு - வழக்கம் ;
- ஒருவர்பால் நிகழ்வது பழக்கம்.
- அதேபோல் பலரிடத்தும் செய்வது வழக்கம்.
- பழக்கம் மிகுந்து வழக்கமாய் விடுதல்.
3. ஏதிலார் மாட்டு என்னை கொல் - தமக்குத் தொடர்பற்றவர் தம் நிலையில் என்னபடி நடந்து கொள்வாரோ?
ஏதிலார் மாட்டு - தமக்குத் தொடர்பில்லாத அயலாரிடத்து.
- ஏதிலாரை 'வேண்டாதார்' என்று பரிதியாரும்,
'பகைவர்' என்று காலிங்கரும், பொருள்படுத்துவர்.
- துன்னியார் (பொருந்திய நண்பர்) என்று முன்கருத்தில் கூறியதால், இதில், தொடர்பில்லாத (அயல)வர் என்பதே பொருந்தும் என்க.