திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
35
'புறன்நோக்கி' - என்பதற்கு உரையாசிரியர் சிலர் 'பிறர் இல்லாத இடம் நோக்கி' என்பர். அதனினும் 'புறத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்று' என்னும் பொருளே பொருந்துவது.
புன்சொல் - புல்லிய சொல்.
- கீழ்மையான சொற்கள்.
பொறை - சுமை, கனம், பாரம்.
- புன்சொல், உரைப்பானை நிலத்துக்குப் பொறை - சுமை என்றது, அவனால் உலகிற்குக் கேடாதலின் என்க.
-இவ்வாறு நிலத்துக்குப் பொறையாக - சுமையாக - உள்ளவர்கள் பலரை ஆசிரியர் ஆங்காங்கே சுட்டுவார்.
‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை’
- 570
‘கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை’
- 572
‘சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை’
- 990
'இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை'
- 1003
2. வையம் அறம் நோக்கி ஆற்றும்கொல் - இவ்வுலகம் பொதுமையறம் கருதிப் பொறுத்துக் கொண்டுள்ளதோ?
வையம் - உருட்சியால் உலகம் வையம் எனப்பெற்றது. அறம்நோக்கி - பொதுமையறம் கருதி.
- பொதுமையுணர்வே அறம் எனப்பெறுவது.
(காண்க : அறன்வலியுறுத்தல் அதிகார முன்னுரை)
- பொதுமையறம் வேறுபாடு கருதாத சமநிலை உணர்வு.
- ஒப்புரவு - ஒத்தது அறிதல் (214)
- பல்லுயிர் ஒம்புதல் (322)
- மேலும் உலகம் கண்ணோட்டம் இரக்கம் என்னும் அறவுணர்வு உடையது. அதனால், எத்தகையவர் மேலும் இரக்கம் கொள்ளும் தன்மை கொண்டது என்பார், நூலாசிரியர்.
(அஃதாவது, உலகியலின் தன்மையை உலகின் மேல் ஏற்றிக் கூறுவார்)
‘கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு'
- 571