80
அ-2-17 தீவினையச்சம் -21
- சிறந்ததைத் 'தலை' என்று கூறுதல் நூலாசிரியர் வழக்கு.
'ஐம்புலத்தாறு ஒம்பல்தலை’ - 43
‘முயல்வாருள் எல்லாம் தலை’ - 47
'நிறைகாக்கும் காப்பே தலை’ - 57
'இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ - 151
‘தானஞ்செய் வாரின் தலை’ - 295
‘மானாசெய் யாமை தலை’ - 317
‘தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ - 322
‘கொல்லாமை சூழ்வான் தலை' - 325
‘செல்வத்துள் எல்லாம் தலை’ - 411
‘வன்மையுள் எல்லாம் தலை’ - 444
'பொறுத்தாற்றும் பண்பே தலை’ - 579
‘கழிதல் குரவே தலை’ - 657
‘எண்ணி உரைப்பான் தலை’ - 687
'நாடென்ப நாட்டின் தலை' - 736
'வெறுக்கையுள் எல்லாம் தலை’ - 761
'தமரின் தனிமை தலை’ - 814
'இன்னா செய்யாமை தலை' - 852
'போற்றலுள் எல்லாம் தலை’ - 891
'உழந்தும் உழவே தலை' - 1031
3. அறிவுள்ளவர்கள் தம்மைப் பகைப்பவர்களுக்கும் கூட தீயவற்றைச் செய்யமாட்டார்கள் என்றார்.
உ0௪. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு
- 204
பொருள்கோள் முறை:
மறந்தும் பிறன்கேடு சூழற்க. சூழின்
குழ்ந்தவன் கேடு அறம் குழும்
பொழிப்புரை: மறந்தும்கூட ஒருவன் பிறனுக்குக் கேடுகள் செய்ய எண்ணிப் பார்க்க வேண்டாம். அவ்வாறு எண்ணினால், எண்ணுகிறவனுக்குத்