94
அ-2-17 தீவினையச்சம் -21
‘கள்ளாமை காக்க தன் நெஞ்சு’ - 287
‘அறிவிலான் நெஞ்சம்’ - 842
‘மருள் நெஞ்சம்’ - 352
‘ஈயாது இவறும் மருள்’ - 1002
‘கரப்பிலா நெஞ்சம்’ - 1053
‘காணாச் சினத்தான் கழிபெரும் காமத்தான்’ - 866
‘தன்நெஞ்சம் தானறி குற்றப் படின்' - 272
‘உள்ளத்தால் பொய்யா தொழுகின்’ - 294
‘மனத்தொடு வாய்மை மொழியின்' - 295
'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற’
- 304
‘நெஞ்சத்து ஒளித்தல்’ - 928
‘வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம்’ - 271
-ஈங்கு எடுத்துக் காட்டிய ஆசிரியர் கூறும் மனமாசுகள் ஆவன: அஃதாவது மனப் பகையுணர்வுகள் ஆவன.
- வஞ்சமாக இயங்குவது; குறுகிய உள்ளம்; சினம் கொள்வது; பொறாமை கொள்வது; நடுநிலையில்லாமை; திருட்டு உணர்வு: பெருந்தன்மையின்மை, கள்ள உணர்வு; அறிவால் செப்பப்படுத்தப் பெறாத அலைவுள்ள உள்ளம்; சூதுடைமை; காம உணர்வு, கரவுணர்வு: குற்றவுணர்வு, பொய்யான உள்ளம் மறைத்துப் பேசும் உணர்வு; தீயவை எண்ணும் உள்ளம் முதலியன.
- இவ்வுணர்வுகள் ஒருவன் மனத்தில் தோன்றி, வளர்ந்து, நிலைப்படின், அவை அவனுக்கே அகப்பகையாக நின்று இயங்கும் என்க.
- இவைபற்றிப் பிறரும் பலவகையாகக் கூறியிருப்பனவும் இங்குக் கவனிக்கத் தக்கன, அவற்றுள் சில :
‘தன்னுடன் உறை பகை’ - அகம் 186 : 20
‘பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை’ - கலி : 118 : 18
‘கடவுபு கைத்தாங்கா, நெஞ்சு எனும் தம்மோடு
உடன்வாழ் பகை உடையார்க்கு’
- கலி: 73: 23 - 24
‘பொய்த்துரை என்னும் பகை இருள்’ - திரிகடு:22 : 3
‘பகை, ஒருவன் முன்னம் வித்தாக முளைக்கும்.' - நான்மணி:30:3
'தீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை' - திரிகடு : 78:3