18 திருக்குறள் விளக்கு
வணிகர்: அமைச்சர் தலைவரே, இதற்கு நீங்கள் வர வேண்டுமா? அரசரிடம் இல்லாத பொருளா என் னிடம் இருக்கப்போகிறது ?
அமைச்சர் : இல்லை இல்லை; நீங்கள் பொருளில் அரசரைவிடப் பெரியவர்கள். இதோ அரசருடைய முத்திரை மோதிரம் பாருங்கள். மிகவும் அவசர மாக வேண்டுமாம், தயை செய்து தருவீர்களா ?
(பொற்காசுகள் கொட்டும் கலகல ஒலி. அமைச்சர் போகிறார்.)
வேறு ஒரு குரல்: போய்விட்டானா பாவி ? எத்தனை பொன் கொடுத்தீர்கள் வணிகரே!
வணிகர் : வா அப்பா, வா, அரசர் பணிந்து கேட்கச் சொன்னாராம்! அதிகாரம் பணிவது என்றால் பொருள் உண்டா? உயிர் இரக்கும் கொடுங்கூற்று அல்லவா அது ? என் செய்வது ? ஆயிரம் பொன் கொடுத்துத் தொலைத்தேன். இல்லாவிட்டால் அதி காரம் இருக்கிறது ஏதும் செய்ய.
- - (மாற்றம்.1
★
குரல் அ : முன்னே கண்டோமே, ஆறலை கள்வன் வேலைக் காட்டி வழிப்போக்கன் மடியில் இருப்பதை வைக்கச் சொன்ன காட்சி, அதற்கும் இதற்கும் வேற்றுமை உண்டா? இல்லை என்று சொல்கிறார்
வள்ளுவர்* - - - வேறு குரல்: (பாடுகிறது.)
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு:
1. குறள், 52