பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26 திருக்குறள் விளக்கு

அழுக்கா றெனஒரு பாவிதிருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்" -

என்று கூறுவதைக் காண்க. இதனால் பொறாமைக் குணத்தையும் இவர் அதிகமாக வெறுத்தாரென்று தெரிகிறது. - . - (மாற்றம்.)

குரல் ஆ : கவிதைப் பண்புக்கு வாருங்கள்.

குரல் அ : அதைச் சொல்லத்தான் வந்தேன். பாவி யென்று குணத்தையே வைகிறார் திருவள்ளுவர். அந்த வசவைப் பெறும் குணங்களில் ஒன்று வறுமை. அதன் கடுமையை வேறு ஒரு பாட்டில் சொல்ல வருகிறார் திருவள்ளுவர்,

குரல் ஆ : அப்படிச் சொல்லும் முறையில் கவிச் சுவை அமைந்திருக்கிறது என்று சொல்லப் போகிறீர்களா ?

குரல் அ : ஆம்; ஆவலைத் தூண்டிவிடும் வகையில் அதைச் சொல்கிறார்.

குரல் ஆ: எப்படி?

குரல் அ : வறுமையை இன்மை என்னும் சொல்லால் குறிக்கிறார். வள்ளுவரையும் அவர் உபதேசத்தைக் கேட்பவரையுமே இங்கே கொண்டுவந்து நிறுத்தி ஒரு காட்சியைக் கற்பனை செய்யலாமென்று தோன்றுகிறது.

(மாற்றம்.)

- + 1. குறள், 168, 2. திருவள்ளுவரும் திருக்குறளும்