திருக்குறள் விளக்கு27
வள்ளுவர் : இன்மையின் கடுமையை என்னென்பது! அதை உவமை கூறி விளக்கினால் உங்களுக்கு விளங்கும். நீங்களும் வறுமையைப்பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்களே ; நீங்களே உங்கள் சிந்தனை யைத் தூண்டிப் பாருங்கள். எதை உவமை கூற லாம் என்று ஆராய்ந்து பாருங்கள்.
இன்மையின் இன்னாதது யாது? -
ஒரு குரல் : நாம் யோசிக்கலாமே! மிகக் கொடுமை யான வறுமைக்கு எதை உவமையாகச் சொல்ல லாம்? நெருப்பைச் சொல்லலாமா ?
மற்றொரு குரல் : நெருப்பா? அது எத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறது! அதைச் சொல்லலாமா?
முதற் குரல் : அப்படியானால் நோயைச் சொல்லலாமா? - -
மற்றொரு குரல் : நோயால் உடம்புதானே நலிவு பெறும்?
முதற் குரல்: பின்னே எதைச் சொல்வது? கடன் வாங்கினவன் படும் தொல்லையைச் சொல்லலாமா ? அருமைப் பிள்ளையை இழந்தவன் துயரைச் சொல்லலாமா? - -
வள்ளுவர் : இன்னும் உவமையைக் கண்டுபிடிக்க வில்லையா ? -
இன்மையின் இன்னாதது யாது ?
இரண்டாவது குரல் : பாம்பைச் சொல்லலாமா? காட்டு விலங்கைச் சொல்லலாமா? நஞ்சைச் சொல்ல லாமா ? -