பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு27

வள்ளுவர் : இன்மையின் கடுமையை என்னென்பது! அதை உவமை கூறி விளக்கினால் உங்களுக்கு விளங்கும். நீங்களும் வறுமையைப்பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்களே ; நீங்களே உங்கள் சிந்தனை யைத் தூண்டிப் பாருங்கள். எதை உவமை கூற லாம் என்று ஆராய்ந்து பாருங்கள்.

இன்மையின் இன்னாதது யாது? -

ஒரு குரல் : நாம் யோசிக்கலாமே! மிகக் கொடுமை யான வறுமைக்கு எதை உவமையாகச் சொல்ல லாம்? நெருப்பைச் சொல்லலாமா ?

மற்றொரு குரல் : நெருப்பா? அது எத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறது! அதைச் சொல்லலாமா?

முதற் குரல் : அப்படியானால் நோயைச் சொல்லலாமா? - -

மற்றொரு குரல் : நோயால் உடம்புதானே நலிவு பெறும்?

முதற் குரல்: பின்னே எதைச் சொல்வது? கடன் வாங்கினவன் படும் தொல்லையைச் சொல்லலாமா ? அருமைப் பிள்ளையை இழந்தவன் துயரைச் சொல்லலாமா? - -

வள்ளுவர் : இன்னும் உவமையைக் கண்டுபிடிக்க வில்லையா ? -

இன்மையின் இன்னாதது யாது ?

இரண்டாவது குரல் : பாம்பைச் சொல்லலாமா? காட்டு விலங்கைச் சொல்லலாமா? நஞ்சைச் சொல்ல லாமா ? -