பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 29

முதற் குரல் : ஆ! எத்தனை அழகாகச் சொல்லிவிட்டார்? வறுமையைப்போலக் கொடுமையானது எது என்றால், வறுமையைப்போல வறுமையே கொடுமையானதாம்.

இரண்டாவது குரல் : உவமை சொல்லி மாளாது என்பதையல்லவா, நம் ஆவலைத்தூண்டிச் சடுகுடுக் காட்டி அழுத்தமாகப் புலப்படுத்திவிட்டார்?

(மாற்றம்.)

குரல் அ: திருவள்ளுவர் வறுமையின் கொடுமையை, அது இன்னாதவற்றுள் தலைசிறந்தது என்பதை, அழகிய முறையில் தெளிவாக்குகிறார், உவமையே இல்லாத கொடியது அது என்று சொன்னால் உப்புச்சப்பு இல்லாமல் இருக்கும். உவமையைக் கேட்பார் போன்று ஒரு கேள்வியை எழுப்புகிறார். இன்மையின் இன்னாதது யாது என்ற அந்தக் கேள்வியைக் கேட்கும்போது, நாம் நம் அநுபவத் தில் வந்த கொடுமைகளை யெல்லாம் அடுக்கிப் பார்க்கிறோம். ஒன்றும் சரிப்படுவதில்லை. பிறகு அவரே சொல்லப்புகுவார் போல, ' இன்மையின் இன்னாதது யாது? எனின்' என்று தொடங்கி இன்மையின் என்று அதை நீட்டி, கடைசியில் அதற்கு அதுவே உவமை என்று சொல்லிவிடு கிறார் பாட்டை மறுமுறையும் கேட்போமா?

வேறு குரல் : (பாடுகிறது)

இன்மையின் இன்னாதது யாது எனின்,

இன்மையின் இன்மையே இன்னாதது.

குரல் ஆ: அழகான கவிதை! அற்புதமான உத்தி. இறையனார் சொன்னதுபோல இது நின்று