பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32 திருக்குறள் விளக்கு

பெண் குரல்-காதலி: இன்னும் அவர் வரவில்லையே! ஊருக்குப் போனவர் குறிப்பிட்ட காலத்தில் வராமல் இப்படித் துன்புறுத்துகிறாரே !

. (தோழி வருகிறாள்.)

மற்றொரு பெண் குரல்-தோழி: என்ன, ஒரு விதமாகச் சோர்வடைந்திருக்கிறாயே! உடம்புக்கு ஏதாவது தீங்கு உண்டோ?

காதலி: உடம்புக்கு ஒன்றும் இல்லை; உள்ளந்தான் சரியாக இல்லை.

தோழி : உள்ளத்தில் என்ன வேதனை? உன் கண்கள் ஏன் இப்படிச் சிவந்து கலங்கி யிருக்கின்றன?

காதலி: இரவு முழுவதும் தூக்கமே இல்லை.

தோழி: ஏன் அப்படி?

காதலி: அவர் ஊரில் இல்லை. போனவுடன் கடிதம் போடுகிறேன் என்றார், போடவில்லை. .

தோழி: ஆண்பிள்ளை அவர் போன இடத்தில் என்ன வேலையோ? அதைக் கவனித்துக்கொண்டு தானே வரவேண்டும்? .

காதலி: ஆனாலும் எனக்கு அவருடைய நினைவாகவே இருக்கிறது. அவருக்குக் காலையில் இளஞ்சூடாக வெந்நீரில் குளிக்க வேண்டும். சுடச்சுட உணவு வேண்டும். போகிற இடத்தில் என்ன வசதி இருக்கிறதோ தெரியவில்லை. இவற்றை எண்ணி எண்ணி, இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை.

தோழி: அவர் வருகிற வரைக்கும் இப்படித்தான் இருக்குமோ? . .