பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருக்குறள் விளக்கு 37

தோழி: இதுதானே நீ சொன்ன பூத சதுக்கம் ?

மருதி ஆம்.-பூதப்பெருமானே! என்னைக் கண்ட ஒரு பாவியின் நெஞ்சிலே புகுமளவுக்கு நான் எளியவளாகிவிட்டேன். இனி நான் இல்லறம் செய்வதற்குரிய தகுதியை இழந்துவிட்டேன். நான் என்ன குற்றம் செய்தேனென்று எனக்கே தெரிய வில்லை. நீ என்னை என்ன செய்தாலும் சரி.

பூதக் குரல் : (சிரிப்பு.) ஏ !பெண்ணே!'

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய் யெனப் பெய்யும் மழை"

என்ற பொய்யில் புலவ னுடைய பொருள் நிரம்பிய உபதேசத்தை நீ தெரிந்துகொள்ளவில்லையே! நீ வம்புக் கதைகளைக் கேட்டு; திருவிழாவைப் பார்ப்பதற்காகப் பல இடங் களுக்குப் போகிறாய்; அங்கங்கே உள்ள தெய்வங் களைக் கும்பிடுகிறாய். ஆதலால் உன் கற்பு, தலைமைக் கற்பாக இருக்கவில்லை. மழையை நீ பெய்யென்றால் பெய்யாது. பிறர் நெஞ்சைச் சுடும் தன்மையும் உனக்கு இல்லை. - -

மருதி: அப்படியானால் என்னைக் கொன்றுவிடு.

பூதம்: நீ ஏதும் மனத்தாலும் தீங்கு செய்யவில்லை யாதலால் உன்னை நான் தண்டிக்கமாட்டேன். போய் வா. இனியாவது அந்தப் பொய்யில் புலவன் பொருளுரையைத் தேறுவாயாக,

- (மாற்றம்.)

★ -

1. குறள், 55.