பக்கம்:திருக்குறள் விளக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44 திருக்குறள் விளக்கு

குரல் ஈ: மேல்நாட்டாரும் கீழ்நாட்டாரும் பாராட்டு வது , பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றது என்ற செய்திகளையும் அறிந்தோம்.

குரல் உ : பெருங் கவிஞர்கள் தம் காவியங்களில் எடுத்து விரித்து அமைத்துக்கொள்ளும் தகுதியை உடையது என்பதும் தெளிவாயிற்று.

குரல் அ : அது காலம் கடந்தது.

குரல் ஆ: இடம் கடந்தது.

குரல் இ: செறிவுடைய ஒளிமணி.

குரல் : பொழிலாய் விரியும் வித்து.

குரல் உ : பல கவிஞருக்குப் பொருள்தரும் பெட்டகம்.

குரல் அ : கற்கண்டு.

குரல் ஆ: பால்.

குரல் இ: இல்லை, இல்லை, அமுதம்.

குரல் அ : பெருவிளக்கு அறமென்னும் அகலில், பொருளென்னும் திரியிட்டு, இன்பமென்னும் நெய் சொரிந்து, சொல்லென்னும் தீயைக் கொளுத்தி, குறள் வெண்பா என்னும் தண்டில் வைத்து ஏற்றிய விளக்கு.

வேறு குரல் : (பாடுகிறது.)

அறம்தகளி ; ஆன்ற பொருள்திரி ; இன்பு

சிறந்தநெய்: செஞ்சொல் தீ தண்டு - குறும்பாவா

வள்ளுவனார் ஏற்றினார், வையத்து வாழ்வார்கள்

உள் இருள் நீக்கும் விளக்கு.

(மறுமுறை பாடுகிறது.)

1. திருவள்ளுவ மால், 47.