140 திருக்கோலம்
எவ்வளவு உயர்ந்தது என்று சொன்னலும் நான் மதிமயங்க மாட்டேன். எனக்கு அறிவுத் தெளிவு உண்டாகிவிட்டது. இதில் கலக்கித்துக்கே இடம் இல்லை. அநுபவம் இல்லாமல் அறிவிகுலும் ஆராய்ச்சியிலுைம் அபிராமி சமயத்தைப் பற்றியிருந்தால், ஒருகால் அதையும் பார்க்கலாமே என்று பிறர் போகும் வழியில் போக எண்ணலாம். நான் இப்போது அநுபவத்தை அடைந்து மதி தெளிந்திருக்கிறேன. உருகின அரக்கில் முத்திரை பதித்தால் அந்த அரக்கு மறுபடியும் இறுகி அந்த முத்திரையை அழியாமல் வைத்துக்கொள்ளும்; அதை மாற்ற முடியாது. நானும் அம்பிகையின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டேன். அதல்ை ஆனந்தா நுபவம் பெற்றேன். இந்த உலகமே வந்து, என்ன கூறிலுைம் மயங்கமாட் டேன். என் வழி நான் வகுத்துக்கொண்ட வழி அன்று; அன்னேயே என்னேச் செலுத்தும் வழி. ஆகவே நான் வேறு வழியில் செல்லமாட்டேன்..இப்படி எல்லாம் விரித்துப் பொருள் கொள்ளும்படி தம்முடைய சலனமற்ற அநுபவ நிலையை அவர் சொல்கிருர்.
இனி யான் ஒருவர் х . . .
மதத்தே மயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன். -
பற்றிக்கொள்வதைப் பற்றிப் பெற வேண்டிய அநுப வத்தைப் பெற்றவர்கள், இதுவோ அதுவோ என்று ஐயுருமல் நின்ற நிலையிலே உறுதியாக நிற்பார்கள்.
‘‘அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித்து
அறிந்த அன்றே - கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்துஅறக்
கைத்ததுவே: என்று இந்த நிலையைப்பாடுவார் அருணகிரிநாதர்.அபிராமி பட்டருடைய அசஞ்சலமான பக்தி, அநந்ய உபாசன, அவரை அநுபவத்திலே அழுத்திவிட்டது. அதிலிருந்து மீள