150 திருக்கோலம்
என்பதுவே மெய்ப்பாடு என்பதற்குப் பொருள். கோபம் என்ற குணத்துக்குரிய மெய்ப்பாடு கண் சிவத்தல் முதலியன. இப்படியே ஒவ்வொரு குணத்தையும் வெளிப் படுத்தும் மெய்ப்பாடுகள் இருக்கின்றன. பக்தி என்பது ஒரு - குணம். அதற்கு அறிகுறியான மெய்ப்பாடுகள், பாவங்கள், சில உண்டு. அவற்றைப் பெரியவர்கள் எடுத்துச் சொல்லி யிருக்கிறர்கள். -
அபிராமிபட்டர் அம்பிகையை விரும்பித் தொழும் அடியார்கனே நமக்கு இ ன ம் காட்டுகிருர். முதல் அடையாளம், விழிநீர் மல்கல். அம்பிகையை வழிபடும் உண்மையன் பர்கள் உருகுவார்கள்; அந்த உருக்கத்தின் விளைவாக எழுவது கண்ணிர். -
விரும்பித் தொழும் அடியார்
விழி நீர் மல்கி. இந்த மெய்ப்பாட்டைப் பக்தர்களின் நிலையைச் சொல் லும் யாவரும் எடுத்துரைக்கிறர்கள்.
'உடல்குழைய ன்ன்பெலாம் நெக்குருக விழிநீர்கள்
ஊற்றென வெதும்பி யூற்ற??
அன்பில்ை உருகி விழிநீர் ஆருக: என்று தாயுமானவர் சொல்கிறர்.
பின்பு, உடம்பெல்லாம் மயிர்க் கூச்செறியும்; அதைப் புளகாங்கிதம் என்பார்கள்; புளகம் போர்த்தல் என்றும் சொல்வார்கள்,
விழி நீர் மல்கி, மெய் புளகம் அரும்பி. இந்த இரண்டு மெய்ப்பாடுகளையும், இணைத்துச் சொன்னவர் பலர். - -
'அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப
அன்பினால் உருகி விழிநீர் ஆருக??