இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருச்சிற்றம்பலம்
திருக்கோவையார் உரைநடை
க. இயற்கைப் புணர்ச்சி
இது ‘தெய்வப் புணர்ச்சி’ , ‘முன்னுறு புணர்ச்சி’, ‘காமப் புணர்ச்சி’ எனவும் படும்.
தலைமகனும் தலைமகளும் பொழிலிடத்து எதிர்ப்பட்டுத் தெய்வம் இடை நிற்பத் தம்முள் ஒத்த அன்பினராகக் கூடுவது.
1. காட்சி [1. திருவளர்]
தலைவன் தலைவியைக் கண்ணுற்று இவள் காமன் தன் வென்றிக் கொடிபோல் விளங்குகின்றாள் என வியக்கின்றான்.
2. ஐயம் [2. போதோ]
வியந்து, இம் மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அல்லது மக்களுள் ஒருத்தியோ என ஐயுறுகின்றான்.
3. தெளிதல் [3. பாயும்]
தலைவியின் கண் இமைத்தலாலும், அடி நிலத்தில் தோய்தலாலும், சூடிய மலர் வாடுதாலாலும் இவள் தெய்வம் அல்லள் எனத் தெளிவுறுகின்றான்.