பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

(5) இளையான்குடி மாத காயஞர்

இளையான்குடி என்னும் ஊரிலே வேளாளர் மரபிலே தோன்றிய மாறர் என்பவர் உழுதொழிலால் செல்வம் படைத்தவர்; சிவபெருமானிடத்தும் சிவனடி யார்களிடத்தும் பேரன்பு உடையவர்: மனேவியாருடன் இல்லிருந்து விருந்தோம்பும் பண்பினராகிய மாறனர் சிவனடியார்களுக்கு நாள்தோறும் அறுசுவை யமுது' படைத்து வந்தார். நாளடைவில் செல்வஞ் சுருங்கி வறுமை எய்திய காலத்திலும் தம்முடைமைகளை விற். றும் இத்தொண்டினைத் தொடர்ந்து செய்துவந்தார். ஒருநாள் முழுவதும் விடாத மழை பெய்தது. வீட்டில் உணவுப்பொருள் இன்மையால் மாறஞரும் ம&னவி யாரும் கடும்பசியுடையராய் உறக்கமின்றித் தெருக் கதவைத் தாளிட்டு இருந்தனர். அந்த நள்ளிரவிலே சிவபெருமான் அடியார் வேடம் பூண்டு இளையான்குடி மாறர் இல்லத்தையடைந்து மிகுந்த பசியா யிருக் கிறது, அன்னம் இடுதல் வேண்டும்’ என்ருர். உடனே மாறஞர் சிவனடியாரை வீட்டில் அமரச்செய்து அன்று பகலில் தாம் உழுது விதைத்த செந்நெல்லின் முளைகளை அள்ளிக்கொண்டு மனேவியாரிடம் கொடுத்தார். வீட்டுக் கூரை அலகுகளைப் பிடுங்கி அடுப்பு மூட்ட அளித்தார். ம8ள வியார் விரைந்து நெல்லே வெதுப்பிக் குற்றி அரிசியாக்கித் திருவமுது அமைத்தார். கொல்ல்ேயில் முளைத்த கீரையைக் கறி சமைத்தார். உறங்குவது போன்றிருந்த அடியாரை எழுப்பி சுவாமி, திருவமுது: செய்தருளவேண்டும் என மாறனர் வேண்டிக் கொண் டார். அந்நிலையில் அங்கு அடியவராக எழுந்தருளிய சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகக் காட்சியளித்து இளையான்குடி மாறஞர்க்கும் அவர்தம் மனேவியார்க்கும். பேரின்பப் பெருவாழ்வை நல்கியருளினர்.