பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

கயிறைச்சி வந்த தொண்டர் அமுதுசெய்யும்பொழுது நினே க் க வரும் என்று அதனை முன்னமே கறியாக்கி வைத்துள்ளேன்’ என்று அதனே எடுத்துக் கொடுத் தார். அந்நிலையிற் பயிரவ அடியார் சிறுத்தொண்டரைப் பார்த்து நமக்குத் தனியே உண்ண ஒண்ணுது அருகில் அடியார் இருந்தால் அழையும்’ என்ருர். வேறு அடியார் யாரையும் கண்டிலேன் யானும் திருநீறு இடுவாரைக் கண்டு பூசிய அடியவன்' என்ருர் சிறுத்தொண்டர். “உம்மைப் போல நீறிட்டார் உளரோ ? நீரும் என்னுடன் இருந்து உண்பீர்” எனக் கூறிய பயிரவர் வெண்காட்டு நங்கையாரை நோக்கி வேருெரு இலைபோடச் செய்து, அதன்கண் வெம்மையிறைச்சிச் சோற்றை எடுத்துப் படைக்க என அவ்வாறே செய்தார். அருகே உண்ண அமர்ந்த சிறுத் தொண்டர் அடியாரை உண்பித்தல் வேண்டித் தாம் உண்ணத் தொடங்கியதும், பயிரவ அடியார் அவரைத் தடுத்து நம்முடன் உண்ண மகவினைப் பெற்றிரா யின் மைந்தனை அழையும்’ என்ருர். அதுகேட்ட சிறுத் தொண்டர் இப்பொழுது அவன் உதவான்’ என்ருர், "நாம் இங்கு உண்பது அவன் வந்தால்தான். அவனே நாடி அழைப்பீர்” எனப் பணித்தார் பயிரவர். சிறுத் தொண்டரும் மனைவியாரும் புறத்தே போய் அழைக்கும் போது சிறுத்தொண்டர் மைந்தா வருக என அழைத் தார். சிவனரடியார் உடன் உண்ண அழைக்கின்ருர் சிராளா வாராய்” 5:இ' அழைத்தார் வெண்காட்டு நங்கையார். அப்போது இறைவர் திருவருளால் பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவருவ னைப் போன்று வந்த புதல் வனத் தழுவியெடுத்துக்கொண்டு அடியாரை 'அமுது செய்வித்தல் வேண்டி வெண்காட்டுநங்கையும் சிறுத்தொண் உரும் வீட்டினுள்ளே புகுந்தனர். அந்நிலையில் பயிரவ ராய் வந்த அடியார் மறைந்தார். அவர்க்குப் படைத்த இறைச்சியுணவும் காணப்படவில்லை. அப்பொழுது மறைந்த சிவபெருமான் உமாதேவியாருடனும் முருகப் பெருமானுடனும் விடைமீதமர்ந்து இனிய கறியும் திரு