பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவமயம்

விநாயகர் துதி

வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்

பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க

ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்

ஆனைமுகனைப் பரவி அஞ்சலிசெய் கிற்பாம்


நால்வர் துதி

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரார்திருத் தாள்போற்றி


அறுபத்துமூவர் - சேக்கிழார் துதி

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த

தொல்லையதாங் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி

ஒல்லையவர் புராணகதை யுலகறிய விரித்துரைத்த

செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி.