பக்கம்:திருப்புமுனை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


செல்வம் இன்னும் கொஞ்ச நேரத்திலே பொத்துக்கிட்டு கீழே விழுந்தாலும் விழுந்திடும்!” சிரித்துக் கொண்டே கேலி பேசினான்.

“அறிவு பையைப் பொருத்தது இல்லை அருள். அதைப் பிடிக்கிற கையையும் படிக்கிற மனதையும் பொருத்தது.” வினயமாகக் கூறி முடித்தான் இனியன்.

“பேச்சுப் போட்டிலே முதற்பரிசு வாங்குறவனாச்சே அகப்பட்டா விடுவியா? அது சரி மயக்கம் போட்டு விழுந்த மாணிக்கம் இப்ப எப்படி இருக்கான்?”

பேச்சை மாற்றி ஆவலோடு கேட்டான் அருள்.

“பாவம்'டா. அவன் வலிப்புடன் மயக்கமா விழுந்த சேதியைக் கேட்டவுடனே நோயாளியாய் இருக்கிற அவன் அம்மா எப்படியெல்லாம் அழுது புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா? மாணிக்கத்துக்கிட்டே படிப்புத் திறமையும் இல்லே, அவன் வீட்டிலேயோ வேறு எந்த வசதியும் இல்லை. அவன் நிலைமை ரொம்பப் பரிதாபம்'டா,”

“உண்மைதான்'டா, நம்ப வகுப்பிலே கண்ணனும் மாணிக்கமும் தானே படு மட்டம்: மேலும், எப்பப் பார்த்தாலும் மாணிக்கம் சோர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/17&oldid=489766" இலிருந்து மீள்விக்கப்பட்டது