பக்கம்:திருப்புமுனை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


போய்த்தான்'டா இருக்கான். போதாக்குறைக்கு வலிப்பு நோய் வேறே" தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

“அவன் சோர்வுக்குக் காரணம் சோம்பேறித் தனம் மட்டுமில்லே, அருள். அவன் வீட்டிலே சாப்பாட்டு வசதியோ, படிக்கிறதுக்கு ஏத்த எந்த ஒரு வசதியுமோ, இல்லை’டா. அவன் அம்மா தன் வறுமையைச் சொல்லி அழுதாங்கடா”.

“அப்படியா?”

ஆமா, அருள். மாணிக்கம் பிறக்கறதுக்கு கொஞ்ச நாள் முன்னதாகவே அவன் அப்பா இறந்துட்டாராம். அவன் அப்பா பட்டிருந்த கடனுக்கு வீடும் போய்விட்டதாம். சாப்பாட்டுக்கு வழியில்லாம அவன் தாயார் தையல் வேலை செய்து மாணிக்கத்தையும் மற்ற மூனு பெண் பிள்ளைகளையும் வளர்த்து வர்றாங்களாம். கடந்த மூணு மாசமா மாணிக்கத்தோட அம்மாவும் படுத்த படுக்கையாயிட்டாங்களாம். மாணிக்கத்துக்குப் படிப்பும் சரியா வரலையே’ன்னு ரொம்பக் கவலைப்படறாங்க அருள்.” மாணிக்கத்தின் குடும்பச் சூழ்நிலையை இனியன் விளாவாரியாக விளக்கிக் கூறினான்.

இனியன் கூறியதை ஆமோதிக்கும் வகையில் அருள் பேசலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/18&oldid=489767" இலிருந்து மீள்விக்கப்பட்டது