பக்கம்:திருப்புமுனை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


அதை அப்படியே ஆமோதித்தான் கண்ணாயிரம். கண்ணனோடு மிகவும் நெருங்கிப் பழகியதால் அவன் நிலைமைகள் அனைத்தும் கண்ணாயிரத்துக்கு அத்துப்படி. அவன் கூறினான்.


“கண்ணன் வாய் எப்பவும் எதையாவது அரைச்சபடியேதான்’டா இருக்கும். அவன் இப்படி பள்ளிக்கூடம் வராம ஊர் சுத்தறதைக் கண்டிச்சு அவன் அப்பாவும் எவ்வளவோ திட்டிப் பார்க்கிறார்; அடித்துப் பார்க்கிறார்; அவன் திருந்தவே இல்லை. அவன் பாதை யிலேதான் அவன் போயிட்டிருக்கான்”.

இவர்கள் கண்ணனைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கும்போதே, கண்ணன் இவர்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தான். எப்போதும் குதூகலமாக வரும் அவன் இன்று கவலையே உருவானவனாக அங்கே வந்தான். அவன் தோற்றம் அவன் நண்பர்களைத் துணுக்குறச் செய்தது. ஏன் இந்தக் கோலத்துடன் வந்திருக்கான் எனப் புரியாது திகைத்தவர்களாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு நிமிடம் அவர் களுக்கிடையே மயான அமைதி நிலவியது அமைதியைக் கலைத்தான் கண்ணாயிரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/23&oldid=489772" இலிருந்து மீள்விக்கப்பட்டது