பக்கம்:திருப்புமுனை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


5

தனக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் இனியனை எட்டிப் பிடிக்கும் பாவனையில் துரித நடைபோட்டு வந்தான் அருள் இனியனை நெருங்கியதும் கேட்டான்:

“இனியா! பள்ளி ஆண்டுவிழாக் கட்டுரைப் போட்டிக்குப் பெயர் கொடுத்துட்டியா?” ஆர்வத் துடிப்புடன் கேட்டுவிட்டு, இனியனின் முகத்தைப் பார்த்தான்.

“நான் மட்டுமா? நம்ம கண்ணாயிரம், கண்ணன், மணி, தங்கதுரை எல்லாருமே பெயர் கொடுத்திருக்காங்க.”

இனியன் தந்த பட்டியலைப் பார்த்தபோது அருளுக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை.

“அவங்கள்’லாம் பெயர் கொடுப்பாங்கன்னு எனக்கு முன்னாலேயே ரொம்ப நல்லாத் தெரியும்! இவங்களுக்கும் கட்டுரைப் போட்டிக்கும் என்னடா சம்பந்தம்? ஒழுங்கா பாடத்தைப் படிக்கிறதும் பள்ளிக்குவர்றதுமே தகராறு. இதிலே...” அருள் முடிக்கும் முன்பே இனியன் இடைமறித்துப் பேசினான்.

“அவங்களும் போட்டியிலே பங்கெடுக்கிறது நல்லதுதானே, அருள். போட்டி கடுமையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/34&oldid=489783" இலிருந்து மீள்விக்கப்பட்டது