பக்கம்:திருப்புமுனை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


இருந்தாத்தானே திறமையான வங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். பரிசு வாங்குறவங்க மதிப்பும் உயரும். போட்டியிலே கலந்து திறமையை காட்டறதுக்காகவாவது நிறையப் படிக்கனும் சிந்திக்கனும் இல்லையா, அருள்.”

இனியனின் கருத்தை முழுக்க ஏற்க இயலாது என்ற பாவனையில் தலையை மேலும் கீழுமாக ஆட்டி அழகு காட்டினான் அருள்.

“அவங்க சிந்திக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா யாருக்கோ ஆபத்து’ன்னுதான் அர்த்தம்.” கடந்த கால அனுபவ அடிப்படையில் கருத்துரைத்தான் அருள்.

“நம்ப நண்பர்களைப்பத்தி நாமே தப்பாப் பேசக்கூடாது அருள். அவங்களும் நல்லவங்க. நாளடைவிலே திருந்துவாங்'கன்னே நம்புவோம்.”

“நீ நம்பிக்கிட்டே இரு நான் வர்றேன்.’ கூறிவிட்டு அருள் விரைந்து நடக்கலானான். நாளடைவிலே திருந்துவாங்’கன்னே நம்புவோம்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/35&oldid=489784" இலிருந்து மீள்விக்கப்பட்டது