பக்கம்:திருப்புமுனை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37


வருமாடா?” தன் மீதே தனக்குள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்தி அப்பாவித்தனமாகக் கேட்டான் கண்ணன்.

“உங்கப்பாகிட்டே இன்னும் அஞ்சு ரூபா வாங்கி நல்லா தீனி தின்னுடா, பிரமாதமா வரும்.” கேலி செய்தான் தங்கதுரை.

“என்னடா வரும்? தூக்கமா?” கிண்டல் செய்தான் மணி.

காரியத்திலேயே குறியா இருந்த கண்ணாயிரத்துக்கு இந்தக் கேலிப் பேச்சும் கிண்டல் வார்த்தைகளும் பிடிக்கவில்லை. நண்பர்களின் வேடிக்கைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தான்.

“போதும்’டா கேலி. நோட்டீஸ் போர்டிலே கட்டுரைத் தலைப்பு இன்னும் போடலியே.” ஆர்வத்தோடு கேட்டான் கண்ணாயிரம்.

“சரியாப் போச்சு! கட்டுரைத் தலைப்பை நோட்டீஸ் போர்டுலே எழுதிப் போட்டு ஒரு மணி நேரம் ஆவுது.” நினைவூட்டினான் தங்கதுரை.

“என்னடா தலைப்பு?” ஆர்வப் பெருக்கோடு கேட்டான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/39&oldid=489789" இலிருந்து மீள்விக்கப்பட்டது