இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
38
“உழைப்பும் உயர்வும்” தலைப்பைக் கூறினான் தங்கதுரை.
தலைப்பைக் கேட்டபோதே கண்ணனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. எந்தக் காரியம் தங்களுக்குப் பிடிக்காதோ, ஆகாததோ அதையே தலைப்பாகக் கொடுத்திருப்பதைக் கண்டு ஒருகணம் மலைத்தான்.
“ஐயகோ! என்னடா இது! தலைப்பே தகராறா இருக்கே. நாம எப்படிடா இந்தத் தலைப்பிலே கட்டுரை எழுதறது?”
கண்ணன் கருத்தை எதிரொலித்தான் மணி.
“அதானே, நமக்குச் சம்பந்தமே இல்லாத விஷயத்தைப்பத்தி நாம எப்படி'டா கட்டுரை எழுதறது? பரிசு வாங்குகிறது?”
தலைப்பைக் கேட்டு மலைத்து நின்ற நண்பர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றான் கண்ணாயிரம்.
“நாம் பரிசு வாங்குறோமா இல்லையாங்குறது பிரச்சினை இல்லை. இனியன் எந்தப் பரிசும் வாங்கக் கூடாது. இதுதானேடா நம்ம நோக்கம்?”