இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
39
“கரெக்டுடா கண்ணாயிரம்” முழுமையாக ஆமோதித்தான் தங்கதுரை.
“இனியன் கட்டுரை எழுதினாலும் எழுதாவிட்டாலும் நாம கட்டுரை எழுதித்தானடா ஆகணும். இல்லேன்னா, எப்படிடா நமக்குப் பரிசு கிடைக்கும்?”
நடைமுறைப் போக்கை நாசுக்காக உணர்த்தினான் கண்ணன்.
“பரிசு வாங்குறதா? இருந்தாலும் இவனுக்கு ரொம்பப் பேராசைடா.” கிண்டல் செய்தான் மணி.
“இந்தத் தலைப்புள்ள கட்டுரை வேறெ எந்தப் புத்தகத்திலேயாவது இருந்ததுன்னா அதைப் பார்த்துச் சுலபமா காப்பியடிச்சு கட்டுரை எழுதி பரிசு வாங்கிடலாம்'டா.” தனக்குத் தெரிந்த வழியைச் சுட்டிக் காட்டினான் தங்கதுரை.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்'னு சொல்லுவாங்க. இந்த விஷயத்திலே நீ எப்பவும் மாஸ்டர்தான்’டா.”
தங்கதுரையைச் சீண்டினான் மணி.